பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் கோவிந்தபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பது தெரியவந்தது. அவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தர்மராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டு 500 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.