அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வளையம் கிராமத்தில் அரசு சொந்தமான முந்திரி காடு அமைந்துள்ளது. இந்த காட்டில் இருக்கும் மரத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நம்பர் யார்? அவர் எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.