திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய சிலுக்குவார் பட்டியல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சவுதியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிகிலேஷ்(17), பாலையா(15) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் நிகிலேஷ் நிலக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிகிலேஷால் பாடத்தில் கவனம் செலுத்த இயலவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த நிகிலேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிகிலேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.