மதுரை மாவட்டத்திலுள்ள சாணம்பட்டியில் விவசாயியான ராஜாங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இராமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவ்யதர்ஷினி என்ற மகளும், விக்னேஷ்(11) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் திவ்யதர்ஷினி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பும், விக்னேஷ் 6- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் ராஜாங்கம் திவ்யதர்ஷினிக்கு புது செருப்பு வாங்கி கொடுத்துள்ளார்.

அப்போது தனக்கு புது செருப்பு வாங்கி தரவில்லை என்ற கோபத்தில் விக்னேஷ் வெளியே சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.