கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்திமரத்துபள்ளம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதம்(17) சிகரள பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கௌதம் தனது வகுப்பு ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனால் பள்ளி ஆசிரியர்கள் கௌதமின் பெற்றோரை வரவழைத்து நடந்தவற்றை கூறியுள்ளனர். பின்னர் வீட்டிற்கு சென்ற பெற்றோர் கௌதமிடம் ஆசிரியரை இவ்வாறு பேசக்கூடாது என கண்டித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த கௌதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கௌதமின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.