ஈரோடு மாவட்டத்திலுள்ள காலிங்கராயன் பாளையம் பாரதி நகரில் லாரி டிரைவரான ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்தி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகமாக செல்போன் பயன்படுத்திய ஆர்த்தியை பெற்றோர் கண்டித்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி வைத்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஆர்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஆர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.