கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கானாங்காடு பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி சம்பவம் நடைபெற்ற அன்று சின்னதுரை அப்பகுதியில் இருக்கும் வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக சின்னதுரை உயரமான இடத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.