கேரள மாநிலத்தில் உள்ள பட்டணம் திட்டா மாவட்டத்தில் ராஜு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஷாலியா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு ரோஜன் ராஜு(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கலியக்காவிளை அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்துள்ளார். இவர் ஆன்றோ என்ற மாணவரின் வீட்டில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று கல்லூரியை சேர்ந்த ஒன்பது மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பேச்சுப்பாறை அணைக்கு சுற்றுலா சென்றனர் பின்னர் மதியம் பிரியாணி சமைத்து சாப்பிட்டு ரோஜன் ராஜு உள்பட 4  மாணவர்கள் அணையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நீச்சல் அடிக்க முடியாமல் ரோஜன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அவரை மற்ற மாணவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர் ரோஜன் ராஜு ஏற்கனவே ஒரு இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவரின் தந்தை உயிரிழந்த நிலையில் தாய் ஷாலியா கஷ்டப்பட்டு மகனை படிக்க வைத்தார். மதன் உடலை பார்த்து ஷாலியா கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.