நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவளையில் தற்போது வேலை அல்லது தொழில் செய்வோர் என இரு தரப்பினருக்காகவும் எஸ்பிஐ வங்கி ஒரு அட்டகாசமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது எஸ்பிஐ வங்கி மாத வருமானம் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் எஸ்பிஐ ஆண்டுத் தொகை டெபாசிட் திட்டம். இதில் முதலீட்டாளர்களுக்கு உத்திரவாதத்துடன் வருமானமும் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் ஒரு பெரிய தொகையை மொத்தமாக செலுத்தி விட்ட பிறகு பயனாளிக்கு மாதந்தோறும் தவணை தொகையை எஸ்பிஐ வங்கி செலுத்தும். அதில் அசல் மற்றும் வட்டி என இரண்டும் கலந்து இருக்கும். இதனால் முதலீட்டாளர்களின் அசல் தொகை குறைந்து கொண்டே வரும். இந்த திட்டத்தில் மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டு,ஏழு ஆண்டு மற்றும் 10 ஆண்டு என பல்வேறு கால வரம்புகளுக்கு முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்ய விரும்புவோர் அருகில் உள்ள sbi வங்கி கலையை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.