மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. இதில் மத்திய பிரதேசத்தில் 2 விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ஒரு விமானியின் நிலை என்னவென்று தெரியவில்லை.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் மத்திய பிரதேசம் அருகே மோரனாவில் விபத்துக்குள்ளாகியுள்ளன என விமானப்படை தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட 2 விமானங்களும் விபத்தில் சிக்கியது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விழுந்து நெருங்கிய விமானமும் விமானப்படைக்கு சொந்தமானது என இராணுவம் தகவல் தெரிவித்தது. அதாவது மத்திய பிரதேச மாநிலத்தில் 2 போர் விமானங்களும், ராஜஸ்தானில் விமானப்படை விமானமும் விபத்துக்குள்ளாகியுள்ளது. சுகோய் விமானத்தில் 2, மிராஜ் 2000 விமானத்தில் ஒருவர் என மொத்தம் 3 விமானிகள் பயணித்துள்ளனர். 3 விமானிகளில் 2 பேர் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில்  ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும்  காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது..