மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது..

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. மத்திய பிரதேசம் அருகே மோரனாவில் 2 விமானங்களும் விபத்துக்குள்ளாகியுள்ளன என விமானப்படை தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட 2 விமானங்களும் விபத்தில் சிக்கியது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விழுந்து நெருங்கிய விமானமும் விமானப்படைக்கு சொந்தமானது என இராணுவம் தகவல் தெரிவித்தது. அதாவது மத்திய பிரதேச மாநிலத்தில் 2 போர் விமானங்களும் ராஜஸ்தானில் விமானப்படை விமானமும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.. உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவுமில்லை.