பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் தகுதிநீக்கத்தை கண்டிக்கும் விதமாக கையில் பதாகைகள் ஏந்தியும், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்குள் வந்தனர்.

அதேபோல் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் எதார்த்தமாக கருப்பு உடையில் வந்ததை அடுத்து, சபாநாயகர் அப்பாவு இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழகத்தில் எமர்ஜென்சியின் போது திமுக தலைவர்கள் எப்படியெல்லாம் சிரமப்பட்டார்கள் என்பதை நினைவூட்டவே கருப்பு உடையில் வந்தேன் என சாதுர்யமாக பதில் கூறி தப்பித்தார் வானதி சீனிவாசன்.