வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி புரட்சித் தலைவர் பிறந்தநாள், அதிமுக 51ம் ஆண்டு, அம்மாவின் பிறந்தநாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது என ஓபிஎஸ் அறிவித்தார். தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை நிரூபிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் திருச்சியில் ஏப்ரல் 24ஆம் தேதி முப்பெரும் விழாவாக நடத்தப்படவுள்ள மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என சசிகலாவுக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுக்க உள்ளார். சசிகலா மட்டுமல்லாமல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி அன்வர் ராஜா, கே.சி.பழனிசாமி உள்ளிட்ட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என்றும் இந்த மாநாட்டில் கட்டாயம் அனைவரும் பங்கேற்பார்கள் எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.