வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி புரட்சித் தலைவர் பிறந்தநாள், அதிமுக 51ம் ஆண்டு, அம்மாவின் பிறந்தநாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது என ஓபிஎஸ் அறிவித்தார். தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை நிரூபிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.