திருவாரூரில் உள்ள திரு.வி.க அரசு கல்லூரி முதல்வர் நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ”சனாதன எதிர்ப்பு” பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துக்களை அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15 அன்று மாலை 3 மணி அளவில் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்கிறார்கள் என தெரிவித்தார்.

இந்த சுற்றறிக்கையை தனது சமூக ஊடகமான twitter x பக்கத்தில் பகிர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழகத்தில் திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சகோ.அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு “சநாதனை எதிர்ப்போம்”@திமுக
மாணவர்களின் மனதில் நஞ்சை ஊட்டுகிறது அரசு. அரசியலமைப்புக்கு எதிரானது இல்லையா?? என பதிவிட்டுள்ளார்.