புதுச்சேரியில் குறுருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேர்ந்த கல்லூரி மாணவி டெங்குவால் உயிர் இழப்பு. 

புதுச்சேரியில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயானது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குறுருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிப்பு பகுதியை  சேர்ந்த கல்லூரி மாணவி  காயத்ரி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு  இருதய நோயும் சேர்ந்து கொண்டதால் அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.  டெங்குவால் உயர்ந்ததாக மருத்துவ அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு புதுவையில் 820 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.  இந்த ஆண்டு அது படிப்படியாக அதிகரித்து 1200 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.