திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே..அம்மாபட்டியில் பிஸ்கட் வியாபாரியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேனில் பிஸ்கட் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடவூர் பிரிவு அருகே சென்ற போது முருகன் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.