திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பால சமுத்திரத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதனகோபால்(28), ஞானசேகர்(20) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன், தம்பிக்கும் மதனபுரத்தில் வசிக்கும் சக்திவேலுக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 23-ஆம் தேதி மதனகோபாலும், ஞானசேகரும் பழனி அடிவாரம் பகுதிக்கு வந்தனர். அப்போது சக்திவேல் அவர்களை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்தனர். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.