சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தினசரி மெட்ரோ ரயிலில் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு மாதமும் அதிக முறை பயணம் செய்த பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் பரிசு வழங்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் அதிக முறை பயணித்த 10 பயணிகளுக்கு 2000 ஆயிரம் மதிப்பிலான பரிசும், 30 பயணிகளுக்கு விருப்பம் போல் பயணம் செய்யும் பயண அட்டையும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் கடந்த 11 மாதத்தில் 11 லட்சத்திற்கு பரிசுகள் வழங்கப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது ‌