தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்(NFSA) கீழ் அரசால் இலவச கோதுமை மற்றும் அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதன் கீழ் ஹரியானா அரசு பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. அதாவது, இனி சில மாவட்டங்களில் ஏழைகளுக்கு முழு கோதுமைக்கு பதில் கோதுமை மாவு வழங்கப்படும். எனினும் இதற்காக 1 கிலோவுக்கு சில ரூபாய் செலுத்தப்பட வேண்டும். ஹரியானா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோதுமை இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.

தற்போது கர்னால், அம்பாலா, யமுனாநகர், ரோஹ்தக், ஹிசார் போன்ற மாவட்டங்களில் முழு கோதுமைக்குப் பதில் கோதுமை மாவு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த 5 மாவட்டங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமைக்கு பதில் இனிமேல் வரும் மாதங்களில் கோதுமை மாவு வழங்கப்படும். முன்பாக ஜனவரி மாதத்தில் இந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த 3.35 லட்சம் பேருக்கு மாவு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து இவ்விவகாரம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, ஹரியானா அரசு ஏழைகளுக்கு கிலோ ரூ.3-க்கு மாவு விநியோகம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.