ஹோலி பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு ஒரு பெரிய செய்தியை வழங்கி இருக்கிறது. அதாவது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்தில் 2 முறை இலவச ரேஷன் வழங்கப்படும். அந்த அடிப்படையில் மார்ச் 8 ஹோலிக்கு முன்பு உங்களுக்கு 2-வது முறையாக ரேஷன் பொருள் கிடைக்கும். பிப்,.20, 2023 முதல் டெலிவரி துவங்கும்.

இம்மாதத்தில் 2வது முறையாக உத்தரபிரதேசம் மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும். உ.பி.யில் உள்ள அரசு ரேஷன் கடைகளில் பிப்,.20 நாளை முதல் இலவச ரேஷன் வழங்கப்படும். கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ (2 கிலோ கோதுமை மற்றும் 3 கிலோ அரிசி) இலவச ரேஷன் கிடைக்கும். அதே சமயத்தில் அந்த்யோதயா கார்டுதாரர்களுக்கு 35 கிலோ (14 கிலோ கோதுமை மற்றும் 21 கிலோ அரிசி) வழங்கப்படும். ஒரு மாத கால தாமதத்திற்கு பின் ரேஷன் முறையானது மீண்டுமாக துவங்கும்.