ஹோலி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அதாவது, இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் விநியோகம் பிப்,.20 ஆம் தேதி முதல் பிப்,.28 வரை நடைபெறும். அதோடு NFSAன் கீழ் நடப்பு ஆண்டு முழுவதும் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் விநியோகமும் மீண்டுமாக வழங்கப்படும்.

ஏழை மக்களின் நிதிச்சுமையை குறைக்க NFSAன் கீழ் ஆண்டு முழுவதும் இலவச ரேஷன் பொருள் விநியோகத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதனிடையே உத்தரபிரதேசத்தில் ரேஷன் விநியோகமானது தாமதமாக நடக்கிறது. இதனால்  தற்போது பிப்ரவரி மாதத்துக்கான இலவச ரேஷன் பொருட்களை இந்த மாதமே வழங்க உத்தரபிரதேசம் அரசு மிகப் பெரிய உத்தரவு பிறப்பித்துள்ளது.