மத்திய-மாநில அரசுகளால் உணவு தானியங்கள் ஏழைகளுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் விநியோகம் செய்யப்படுகிறது. இலவச ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் அரசு திட்டங்களின் பலன்கள் தவிர்த்து இன்னும் பல பெரிய பலன்களும் கிடைக்கிறது என்பது பலருக்கு தெரியாது.

ரேஷன் அட்டை வாயிலாக இலவச மற்றும் மலிவான ரேஷன் மட்டுமல்லாமல் மக்கள் மேலும் பல்வேறு வசதிகளையும் பெறுகின்றனர். அந்த வகையில் ரேஷன் அட்டையை முகவரி சான்றாக பயன்படுத்தலாம். வங்கி குறித்த வேலை (அல்லது) சமையல் எரிவாயு இணைப்பு பெற விரும்பினாலும் ரேஷன் கார்டை எளிதாக பயன்படுத்தலாம். வாக்காளர் அடையாள அட்டை உருவாக்கும்போது உங்களுக்கு அடையாள அட்டை தேவைப்படுகிறது. அப்போதும் ரேஷன் கார்டு அடையாள அட்டையாக செல்லுபடி ஆகும்.