அண்மை காலமாக பல்வேறு பிரபலங்களின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது குறித்த தகவல்கள் வெளிவந்தது. அத்தகைய நிலையில் உங்களது பான்கார்டு, ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆதார், பான் தவறான பயன்பாட்டை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து நாம் தற்போது தெரிந்துகொள்வோம். உங்களின் பான் மற்றும் ஆதாரை போகும் அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்வதை தவிர்க்கவேண்டும்.

அதற்கு பதில் முடிந்தவரையிலும் வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பிற அடையாள அட்டைகளை பயன்படுத்தவேண்டும். உங்களின் பான் மற்றும் ஆதார் விபரங்களை அதிகாரிகள் (அ) நிறுவனங்களுடன் மட்டும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதன் நகலில் தேதியுடன் கையெழுத்திட சமூகஊடகங்கள் உட்பட ஆன்லைன் தளங்களில் உங்களது முழுப்பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதை தவிர்க்க வேண்டும்.

உங்களது பான் எண்ணை கண்காணிக்க இவற்றை பயன்படுத்தலாம். உங்களது கடன் சார்ந்த அறிக்கையை தவறாமல் சரிபார்க்க வேண்டும். உங்களது தொலைபேசியின் கேலரியில் பான் மற்றும் ஆதாரை வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தொலைபேசி தொலைந்துவிட்டால் அவற்றை ஈஸியாக எடுத்துவிடலாம்.