சேலம் மாவட்டத்தில் உள்ள பொம்மியம்பட்டி ஆண்டிக்கொட்டாய் பகுதியில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மிலன்(7), நிதின்(5) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த மாதம் 6- ஆம் தேதி 40 நாள் விடுமுறை எடுத்து அலெக்ஸ் பாண்டியன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அலெக்ஸ் பாண்டியன் திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த தனலட்சுமி தனது கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அலெக்ஸ்பாண்டியன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அலெக்ஸ் பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.