சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியில் நந்தகுமார்- ஸ்ரீதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாம்பலம் பகுதியில் வசிக்கும் மொத்த வியாபாரியான விக்னேஷ் என்பவரிடம் இந்த தம்பதியினர் வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நந்தகுமாரும், ஸ்ரீதேவியும் வியாபாரியிடம் பொருட்களை வாங்கி 30 லட்சம் ரூபாய் வரை பாக்கி வைத்து கொடுக்காமல் இருந்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட விக்னேஷ் கடந்த 2021-ஆம் ஆண்டு சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான தம்பதியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் கரூரில் தலைமறைவாக இருந்த நந்தகுமார், ஸ்ரீதேவி தம்பதியை தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.