விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 தொடரில் நடித்தவர் பிரிட்டோ. இவர் அந்த சிரியலில் நெகடிவ் ரோலில் நடித்தார். இதையடுத்து ஜீ தமிழில் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்து வருகிறார். இப்போது அதே சீரியலில் மலராக நடித்து வருகிறார் சந்தியா ராமச்சந்திரன். சீரியலில் ஜோடியாக நடித்து வரும் சந்தியா ராமச்சந்திரன் மற்றும் பிரிட்டோ இரண்டு பேரும் நிஜவாழ்க்கையிலும் ஒன்றிணைய இருக்கின்றனர்.

அவர்கள் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில், இப்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. சென்ற ஜன,.25 ஆம் தேதியன்று நிச்சயதார்த்தம் நடந்ததாக புகைப்படம் வெளியிட்டு அவர்கள் அறிவித்திருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sandhya. (@sandhyaramachandran)