சென்னை திருவான்மியூரில் வசித்து வந்தவர் வினோத். இவர் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகர் ஆவார். இதற்கிடையில் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகர் வினோத்(29) மாரடைப்பு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த கார்த்தி தற்போது சென்னை திரும்பி உள்ளார்.

நடிகர் கார்த்தி சென்னை திரும்பியதும் உடனே மாரடைப்பில் உயிரிழந்த தன் ரசிகர் வினோத் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அதுமட்டுமின்றி வினோத்தின் குடும்பத்தினருக்கு நடிகர் கார்த்தி பண உதவி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.