பிலிப்பைன்ஸ் நாட்டில் பல பயங்கரவாத அமைப்புகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அங்கு அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருவது வழக்கம். அது மட்டுமல்லாமல் இடதுசாரி கிளர்ச்சியாளர்களும் அரசுக்கு எதிராக போராட்டத்திலும் மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் சம்பவம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் அந்நாட்டில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சுமார் 20க்கும் அதிகமானோர் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.