பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதிண்டாவில் இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் நடைபெற்றது. 2 ராணுவ அதிகாரிகள் படை முகாமுக்குள் சென்று பார்த்தபோது சாகர் பன்னே(25), யோகேஷ் குமார் ஜே(24) போன்றோர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

அதேபோல் மற்றொரு அறையில் சந்தோஷ் எம் நகரால்(25), கமலேஷ் ஆர்(24) போன்றோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த 4 பேரில் இருவர் தமிழகத்தையும், மற்ற 2 பேர் கர்நாடகாவையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதில் உயிரிழந்த யோகேஷ் குமார் ஜே தேனி மாவட்டத்தையும், கமலேஷ் ஆர் சேலம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களின் உடல் நாளை(ஏப். 14) சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.