கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்தை அடுத்த அம்பலப்புழாவில் தாய் இறந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு இரண்டு வயது குழந்தை குளியலறையில் தண்ணீர் பாடையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் வினயன் மகன் விக்னேஷ் என்ற இரண்டு வயது குழந்தை உயிரிழந்தான். இந்த சம்பவம் நடந்த புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் நடந்துள்ளது. சம்பவத்தன்று வீட்டில் பாட்டி சகுந்தலாவும் குழந்தையின் தந்தையின் அண்ணி திவ்யாவும் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குளியல் அறைக்குள் சென்ற குழந்தை தண்ணீர் நிரம்பி இருந்த வாலிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.