ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அருகே எம்.கரிசல்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. அப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.கரிசல்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி தலைமை தாங்க, கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன், பிள்ளையார்குளம் கூட்டுறவு சங்க தலைவர் காளிமுத்து, எம்.கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வில்வ சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவிற்கு வந்தவர்களை தலைமை ஆசிரியை வீரமாளி வரவேற்று பேசினார். பின் ஆண்டறிக்கையை பட்டதாரி ஆசிரியை கலைச்செல்வி சமர்ப்பிக்க, கடலாடி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயம், விஜயலட்சுமி, ருக்மணி தேவி, மேற்பார்வையாளர் சுரேஷ் பாண்டி, ஆசிரியர் பயிற்றுனர் வேளாங்கண்ணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதனையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில இணை செயலாளர் கலைமுருகன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் முனிசாமி, வட்டார செயலாளர் ஆனந்தராஜ், வட்டார பொருளாளர் லிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.  இந்த  நிகழ்ச்சிகள் அனைத்தையும் பட்டதாரி ஆசிரியை பிரின்ஸிலியா, இடைநிலை ஆசிரியை விமலிட்டா, இடைநிலை ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் தொகுத்து வழங்கிய நிலையில், இறுதியாக இடைநிலை ஆசிரியை ஆரோக்கிய ஜெரோபிஸ் நன்றி கூறினார்.