தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்படும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர் தூத்துக்குடியில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை மற்றும் 12-ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் இரவு 11 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். பின்னர் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். இதே போல மறுமார்க்கத்தில் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 4:40 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.