திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது சரவணன் என்ற வாலிபர் ஒன்றாவது நடைமேடையில் சாக்குப்பையில் பட்டாசுகளை கொண்டு சென்றது தெரியவந்தது. இதே போல ரயிலில் ஏறி திருவனந்தபுரம் செல்வதற்கு காத்திருந்த சுமன் என்பவரும் 10 பெட்டிகளில் பட்டாசுகளை வைத்திருந்தார். அந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சரவணன், சுமன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.