தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கன மழை பெய்யும் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து அறிவிப்புகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடக் கோரி அம்மாவட்ட முன்னாள் ஆட்சியர் கவிதா ராமுவுக்கு மாணவர்கள் மெசேஜ் அனுப்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் வைர கட்டியே என்று கூறி கவிதா ராமு மாற்றப்பட்டது கூட தெரியாமல் மாணவர்கள் மெசேஜ் அனுப்பியுள்ளனர். தற்போது அந்த மெசேஜ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.