செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  முல்லை பெரியார் உரிமைப் பிரச்சனையாக இருந்தாலும்… இன்றைக்கு முல்லை பெரியார் 142 அடி உயர்த்தியது நம்முடைய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடங்கி வைத்த சட்டப் போராட்டம். காவேரியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்,  காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைத்து தந்தது நம்முடைய புரட்சித் தமிழர் அய்யா எடப்பாடி ஆட்சி காலத்தில்  தான், அதற்கான தீர்வு காணப்பட்டது. 50 ஆண்டுகால காவேரி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.’

இதன் மூலமாக தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC  காவிரி நீரை கர்நாடக அணையில் இருந்து திறக்க வேண்டும். நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போன காரணத்தினாலே,  தமிழகத்திற்கு உபரி நிறை வழங்காமல் கர்நாடக அரசு ஏமாற்றி வருகிறது.  ஆகவே இந்த உபரிநீரை… நமக்கு உரிய நீராக… உரிய உரிமையாக…  கர்நாடக அரசு கருதுகிறது. ஆனால் நாம் நம்முடைய உரிமையை கேட்கின்றோம்.

இந்த 177.25 TMCயை அவர்கள் எந்த காலத்திலும் தருவதற்கு தயாராக இல்லை. காவிரி நீர் முறைப்படுத்தும் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசிடம் முறையிட இன்றைக்கு இந்த கையாளாக திமுக அரசு தயாராக இல்லை. கர்நாடகா அரசை கண்டித்து சொல்வதற்கு இவர் தயாராக இல்லை. மவுன சாமியாராக மௌன விரதம் இருந்து கொண்டிருக்கிறார். வாய் திறக்க மறுப்பதில் மர்மம் என்னவென்று நமக்கு தெரியவில்லை.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்…. ஆணையும் பரிந்துரை செய்தும்…. ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தும்….  பலமுறை உத்தரவிட்டும் அவர்களுக்கு தண்ணீர் தர மனமில்லை. ஆக கர்நாடக அரசு நடந்து கொள்வது நியாயம் இல்லை. ஆகவே இன்றைக்கு உறுதியாக நடவடிக்கை எடுக்க திமுக அரசு,  கர்நாடக அரசிடம் வலியுறுத்தவில்லை என  டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.