தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  நாம் மக்களை சந்திக்கின்ற கூட்டம் ஆரம்பமாகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இந்த இயக்கம் தான் நாளைய தமிழகத்தினுடைய தலைவிதியை நிர்ணயிக்க போகின்ற இயக்கம் என்பதை நாம் நிரூபிக்கின்ற கூட்டமாக அந்த கூட்டம் அமையும். இதைத்தான் மக்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். எங்கே போனாலும் எப்ப கூட்டம் நடத்த போறீங்க ? எப்போ கூட்டம் நடத்த போறீங்க ? அப்படித்தான் கேக்குறாங்க .

அவங்க மாநாடு நமக்கு சும்மா.நம்முடைய கழக அமைப்பு ரீதியான மாவட்டங்கள்  மொத்தம் 88 மாவட்டங்கள் இருக்குது. அதுல 18மாவட்டங்களுக்கு நாம் திருச்சியில் கூட்டம் நடத்தினோம். இன்னும்  70 மாவட்டங்களுக்கு இன்னும் கூட்டம் நடத்தல. 18 மாவட்டங்களுக்கு நடத்திய கூட்டத்திற்கு அரை பங்கு கூட கூட்டம் இல்ல மதுரையில் அவர்கள் நடத்திய கூட்டம் இல்லை. இது தேவையா ? 2011-இல் மாண்புமிகு அம்மா அவர்கள் கோயம்புத்தூரில் மாநாடு நடத்துனாங்க..

திருச்சியில் நடத்துனாங்க, மதுரையில் நடத்துனாங்க,  ஒன்றையொன்று மிஞ்சும் அளவிற்கு அந்த கூட்டம் இருந்தது. அதே எழுச்சியான கூட்டம் நாம் திருச்சியில் நடத்தி காட்டினோம். தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று. இதுதான் உண்மையான அண்ணா திமுக. நாம் தான் உண்மையான அண்ணா திமுக என்பதை வருகின்ற காலத்தில் நாம் நிரூபித்துக் காட்டுகின்ற நிலையை  நீங்கள் தான் உருவாக்கணும். கழகத்தினுடைய நிர்வாகிகள், அதற்கு பின்னால் பூத்து கமிட்டி, அதற்கு பின்னாலே உறுப்பினர் படிவங்கள் சேர்ப்பது.

இது எல்லாம் முழு ஆற்றலோடு,  ஆர்வத்தோடு  நாம் முழுமையாக நூற்றுக்கு நூறு சதவீதம் முடித்தோம்  என்று சொன்னால் ? 2024 மட்டுமல்லாமல்,  2026இல் வெற்றி பெற போவது…. உண்மையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நாம் தான் என்பதை நாம் நிறுத்தி நிரூபித்துக் காட்டுகின்ற நிலையை நாம் உருவாக்குவோம்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான பேச்சாற்றல், இதயத்தில் இருந்து வருகின்ற அந்த குரல். அவருடைய பேச்சாற்றலை கேட்டு கேட்டு  தத்துவமான பேச்சு , நியாயமான பேச்சு, தர்க்கமான பேச்சு,  நீதியான பேச்சு. அவருக்கு பொய் சொல்ல தெரியாது. புறம் சொல்ல தெரியாது,  நம்பிக்கை துரோகம் செய்தது கிடையாது. அனைவரையும் ஈர்க்கின்ற சக்தியாக பேரறிஞர் அண்ணா அவர்கள் இருந்தார். சாதாரண தொண்டனாக இருந்து,  படிப்படியாக யாராலும் வீழ்த்த முடியாது என்ற காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி,  தர்மத்தை நிலைநாட்டி தமிழகத்தில் நல்ல திராவிட ஆட்சி நிறுவுவதற்கு அவர் தான் அஸ்திவாரமாக இருந்தார்.இன்றைக்கு  சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக….

கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளராக வருவதற்கு காரண கர்த்தா,  மூல காரணம் யார் என்று சொன்னால் ? பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் என்பதனை நாம் இன்றைக்கு நன்றியோடு நினைவு கூறுகின்றோம். ”உண்மையான மாநாடு” மாநில மாநாடு நடத்தப்படும். இன்றைக்கு வேட்பாளர் பட்டியலை வைத்துக்கொண்டு,  உறுப்பினர்கள் படிவங்களை பூர்த்தி செய்து,  ஒரு ஆள்  ஒரு கோடி பேர் சேர்த்துவிட்டோம், ஒன்றை கோடி பேர் சேர்த்துவிட்டோம், இரண்டு கோடி, இரண்டரை கோடி சேர்த்துவிட்டோம் என்று  சொல்கின்றார்கள் பூரம் பொய் என எட்டப்படியை சீண்டினார்.