பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செங்கல்பட்டு மாவட்டம் காட்டுகரனை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முரளி மதுரை மாவட்ட கல்வி அலுவலராகவும், தேனி மாவட்டம் அப்பிப்பட்டி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தென்காசி மாவட்ட கல்வி அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லதா விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாவட்ட கல்வி அலுவலராகவும், திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தரசன் நீலகிரி மாவட்ட கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல திருவண்ணாமலை மாவட்டம் மலபாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலராகவும், சேலம் மாவட்டம் கொங்கு பட்டி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மரிய செல்வம் கோவை மாநகராட்சி கல்வி அலுவலராகவும், மதுரை மாவட்டம் மேலக்கோட்டை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரகுமார் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலராகவும், சேலம் மாவட்டம் குஞ்சாண்டியூர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஷ் தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மயிலாடுதுறை சி.இ.ஓ நேர்முக உதவியாளர் முருகன் நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலராகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமாவதி திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலராகவும், மதுரை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் குருநாதன் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி நீலகிரி மாவட்ட கல்வி அலுவலராகவும், திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம்குமார் நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலராகவும், கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாவட்ட கல்வி அலுவலராகவும், புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் மேல்நிலைப்பள்ளி சுதாகர் ராமநாதபுரம் மாவட்டம் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.