பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் முழு கரும்பு போன்றவை அடங்கும். இந்நிலையில் சர்க்கரை, அரிசி போன்றவை ஏற்கனவே நியாய விலை கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து முழு நீள கரும்பை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் வழங்கப்படுகிறது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 13-ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.