நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்தியாயம் ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இரு பாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் பொருட்டு இந்த முகாம் நடைபெறுகிறது.

இதில் புதுசத்திர மாவட்டத்தைச் சேர்ந்து படித்து வேலைவாய்பற்ற இளைஞர்கள்  கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். மேலும் முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய வரும் விரும்பும் நிறுவனங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குனரை தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை இன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதனால் வேலையில்லாத இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.