பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வர இருக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் வருகையை  முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பிரதமர் மோடி நாளை தமிழகம் வர இருக்கும் நிலையில் திமுக கட்சியின் மூத்த நிர்வாகிகளான ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், எம்பி வில்சன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்தும், அசாம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தின் நிலையத்தை திறந்து வைக்கிறார்.