கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எம்.தாங்கள் கிராமத்தில் செல்வகுமார்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான சினேகா கடந்த 9- ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் டாக்டர்கள் சினேகாவை பிரசவ வார்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனைடுத்து மாலை 3:20 மணிக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. பின்னர் வலிப்பு மற்றும் இருதய அடைப்பால் சினேகா இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் தனது மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.