கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி வடக்கு தெருவில் சுப்பிரமணிய பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு உலகம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கோலப்பன், நாகராஜன், பாலசுந்தரம் பிள்ளை என்ற 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பாலசுந்தரம்பிள்ளையின் மகள் உமாவுக்கு தலை பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக உலகம்மாளின் குடும்பத்தினர் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த காரில் உலகம்மாள், உமாவின் தாய் சுபா, நாகராஜன் மனைவி பிரேமா, கோலப்பனின் மனைவி சுப்புலட்சுமி, உறவினரான உமா, 2 வயது குழந்தை ஆகியோர் இருந்துள்ளனர். இந்நிலையில் நாஞ்சில் புத்தனாரு கால்வாய் சாலை வழியாக தாழக்குடி நோக்கி சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து பலமுறை உருண்டு அங்கிருந்த வாலை தோட்டத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் உமா, உலகம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், இதனையடுத்து படுகாயமடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.