ஈரோடு மாவட்டத்தில் உள்ள வில்லரசம்பட்டி பகுதியில் போதை ஊசிகளை விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வில்லரசம்பட்டி சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசார் இதுவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த நவீன் மற்றும் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

இருவரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் மற்றும் இருமல் மருந்து ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நிரப்பி விற்பனை செய்தது தெரியவந்தது. இதேபோல் சூளை மல்லிநகர் பகுதியில் போதை ஊசிகளை விற்பனை செய்த அன்புராஜ் மற்றும் தீபக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 4 பேரிடமும் இருந்த 10 ஊசிகள், 30 மாத்திரைகள் மற்றும் 2000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.