கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர் ஆவார். இந்நிலையில் போப் ஆண்டவர் தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்கு செல்லும் வழியில் உள்ள தனது பயணத் திட்டங்கள் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் நாட்டிற்கு செல்ல இருப்பதாக குறிப்பிட்டார்.

இதனை அடுத்து மங்கோலியாவிற்கு செல்ல இருப்பதாக குறிப்பிட்ட அவர் வருகின்ற 2024 ஆம் ஆண்டு இந்தியா வர உள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கு காரணம் பிரதமர் மோடி போப் பிரான்சிஸை இந்தியாவிற்கு அழைத்ததன் பேரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.