தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக அஜித் தயாராகி வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் நடிகர் அஜித் பற்றிய ஒரு விஷயம் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் வெளியில் தெரியாமல் பலருக்கு உதவி செய்து வருகிறார். இந்த விஷயத்தை யாராவது சிலர் சொல்லும்போது தான் அஜித் செய்த உதவி பற்றி தெரிய வருகிறது.

அந்த வகையில் அமர்க்களம் படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது நடிகர் பொன்னம்பலம் அஜித்திடம் சென்று என் நண்பனின் மகனுக்கு இதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்காக பண உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார். அதோடு பையனின் மருத்துவ சான்றிதழ்களையும் நடிகர் அஜித்திடம் பொன்னம்பலம் கொடுத்துள்ளார். அதை வாங்கி பார்த்த அஜித் எதுவும் சொல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு மீண்டும் வந்த அஜித் எதுவும் சொல்லாமல் தன் வேலையை மட்டுமே பார்த்துள்ளார்.

இதனால் தான் சொன்ன விஷயத்தை அஜித் மறந்துவிட்டாரோ என்று நினைத்து மீண்டும் அவருக்கு பொன்னம்பலம் ஞாபகப்படுத்த நான் அப்போதே மருத்துவப் பில்லை கட்டி விட்டேன். நீங்கள் இன்னும் மருத்துவமனைக்கு செல்லவில்லையா என அஜித் கேட்டுள்ளார். இதைக் கேட்ட உடன் பொன்னம்பலம் அப்படியே ஆடிப் போய்விட்டார். சொன்ன அடுத்த நொடியே மருத்துவமனையில் பில்லை கட்டி ஒரு சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவியா நடிகர் அஜித்தின் நற்குணம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் அஜித் பலருக்கும் கண் ஆப்ரேஷன் செய்வதற்கு உதவி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.