கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சக்தி கணேசன் சென்னை சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக சென்னை கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனராக இருந்த ராஜாராம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்ட ராஜாராமை போலீசார் பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து பேசுவதை விட செயலில் காட்டுவதே தனக்கு பிடிக்கும் எனவும், தனது செயல்பாடுகளை விரைவில் பார்ப்பீர்கள் எனவும் ராஜாராம் கூறியுள்ளார்.