கடலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த டாக்டர் கரிகால் பாரி சங்கர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ராணிப்பேட்டை உட்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த பிரபு கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை கடலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்று கொண்ட பிரபுவுக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

பதவியேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒடுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று ராணிப்பேட்டை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்தது குறிப்பிடத்தக்கதாகும்.