திருச்சி மாவட்டத்தில் உள்ள சக்கம்பட்டியில் லோகேஸ்வரன்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த லோகேஸ்வரன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லோகேஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லோகேஸ்வரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.