திருச்சி மாவட்டத்தில் உள்ள சீகம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதியார் நகரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்ட நீர்த்தேக்க போட்டியில் குழாய் இணைப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மணப்பாறை- விராலிமலை சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசாரும், அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.